Tuesday, May 09, 2006

தொலைந்து போன கடிதங்கள்



கரிசனத்துடன் எழுதும் அப்பாவின் கடிதம்

புத்தி சொல்லும் அண்ணனின் வார்த்தைகள்

ஆவலுடன் காத்திருக்கும் மனைவி

எப்போது வருவாய் எனும் மகனின் வினா

குடித்துவிட்டு எழுதும் நண்பனின் உளறல்

அவருக்கே புரியாத மாமனாரின் காக்காய் கிறுக்கல்

ஜிலேபி என்றழைக்கப்படும் கல்லூரித் தோழனின் பிழியல்

கல்லூரித் தோழியின் கிட்டத்தட்ட காதல் வரிகள்

தாத்தாவின் பாசக்குழைவு

பொங்கலுக்கு வந்து குவியும் வாழ்த்துக்கள்

தொலைபேசித் தூரத்தாலும் இணையத்தாலும்

இவை அனைத்தையும் தொலைத்த நாம்.

0 comments: